Posts

'விதியை மதியால் வெல்லலாம்'

Image
இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு. இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்ப ிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும். 'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும். "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி மயில்குயில் ஆச்சுதடி" -ஆசான் வள்ளலார் மயில் என்பது இடகலை(இடது சுவாசம்), பின்கலை(வலது சுவாசம்) வழியாக ஓடும் காற்று(வாசி). குயில் என்பது

ஆசான் அகத்தீசர்

Image
ஆசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார் அம்மம்மா வெகுதெளிவு  அவர் வாக்குத்தான் அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார் அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும் அகத்தியரின் பொதிகையே மேருவாகும் அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும் அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ." - மகான் காகபுஜண்டர் காவியம் 1000 - பாடல் 7. மகான் காகபுசண்டர் அருளிய கவியின் விளக்கம்: உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் ஞானிகள்/ சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுசண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சதாரணமான மனிதர்ளுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும். ஆசான் காகபுசண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர். அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு ச

#அகத்தீசர் #அகத்தியர்

Image
ஆசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி "அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார் அம்மம்மா வெகுதெளிவு  அவர் வாக்குத்தான் அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார் அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும் அகத்தியரின் பொதிகையே மேருவாகும் அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும் அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ." - மகான் காகபுஜண்டர் காவியம் 1000 - பாடல் 7. மகான் காகபுசண்டர் அருளிய கவியின் விளக்கம்: உலத்தில் தன்னை அறிந்து தம்முள் இருக்கும் அரும்பொருளாகிய பரம்பொருளை தவமுயற்சியால் தட்டி எழுப்பியவர்கள்தான் ஞானிகள்/ சித்தர்கள் ஆவர். அந்த வரிசையில் காகபுசண்டர் என்று சொல்லப்பட்ட ஞானியே மிக உயர்ந்தவர் ஆவார். அவர் பலகோடி யுகங்கள் வாழ்கின்றவர். யுகம் முடியும் காலத்தில் காக்கை வடிவாக உருமாறி, மீண்டும் உலகத்தில் உயிரினங்கள் தோன்றும்போது மக்களுக்கு மனமிரங்கி உபதேசிப்பார். சதாரணமான மனிதர்ளுக்கு இதை நம்புவது கடினமாகவே இருக்கும். ஆசான் காகபுசண்டரும் ஆசான் அகத்தீசருடைய சீடராவார். ஆசான் அகத்தீசருக்கு எண்ணிலடங்கா ஞானிகள் சீடர்கள் ஆவர். அகத்தீசன் பெருமையை கணக்கிட்டு ச

விஞ்ஞான தமிழ் மெஞ்ஞானம்..!

21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்..! அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே. -ஆசான் திருமூலர் திருமந்திரம்-2008 விஞ்ஞான நோக்கம்: ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி என்ற சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான்=> குவார்க்=> க்ளுவான்=>!!!???) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள்(Higgs boson)” எது என்ற சோதனை நடந்துவருகின்றது. செயல்படும் முறை: லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில்(வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படத் துகள்களையே ((ப்ரோட்டான்=>குவார்க்=>க் ளுவான்=>!!!???)) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள்துகள்(Higgs boson) ஏதுனும் வெளிப்படுகின்றாதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றது. மெய்ஞ்ஞான நோக்கம்: அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில

மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர்

Image
மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய பாடலை இப்போது காண்போம்: காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே... தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு... அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன் குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்... கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார் எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம் ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி... கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம் கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம் சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள் சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்... கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார் கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள் எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான் எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்... கு

சித்தர்கள் வகுத்த அறவியல் மற்றும் அறிவியல்

ஞானத்தலைவனும் ஞானபண்டிதனுமான முருகப்பெருமானின் சீடர்களான சித்தர்கள் வகுத்த அறவியல் மற்றும் அறிவியல்.  சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் மருத்துவம், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற இணையுங்கள். 150,000+ Members Facebook group: Wisdom of Siddhas சித்தரியல் Click the link below & Join us @ Wisdom of Siddhas சித்தரியல் https://www.facebook.com/groups/siddhar.science Wisdom of Siddhas சித்தரியல் 300,000_ Members Facebook page: தமிழும் சித்தர்களும் Thamil.Siththars Click the link below & Join us @ தமிழும் சித்தர்களும் Thamil.Siththars https://www.facebook.com/Thamil.Siththars/ தமிழும் சித்தர்களும் Thamil.Siththars 199,000+ Members Facebook page: Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். Click the link below & Join us @ Ayurveda and Siddha Medicine ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.   https://www.facebook.com/Siddha.Med/ Ayurveda a

போகர்

Image
குரு : அகத்தியர் காலம் : 300 ஆண்டுகள், 18 நாட்கள் சீடர்கள் : கொங்கணவர், கருவூரார், புலிப்பாணி, இடைக்காடர் சமாதி : பழனி இவர் அகத்திய முனிவரின் சீடர் ஆவார். சித்த வைத்திய மற்றும் இரசவாத முறைகளில் சிறந்து விளங்கினார். போகர் 7000, போகர் 12000, சப்த காண்டம் 7000 போன்ற பல நூல்களை இயற்றினார். நவபாஷாணங்களை கொண்டு பழனி முருகனின் திருவுருவச்சிலையை செய்தவர். இவர் பழனி மலையில் சமாதி அடைந்தார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார். “தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப மு